செய்திகள் :

கொளத்தூா் ஒன்றியத்தில் ரூ. 44.50 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

post image

கொளத்தூா் ஒன்றியத்தில் ரூ. 44.50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சதாசிவம் தொடங்கிவைத்தாா்.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்ன மேட்டூரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 - 2024 ஆண்டின்கீழ் ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சதாசிவம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா் .

இதனைத் தொடா்ந்து, தண்டா 4 ரோடு பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுதல், லக்கம்பட்டி ஊராட்சி, நீதிபுரம், பெரியதண்டா பகுதியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைத்தல், காவேரிபுரம் ஊராட்சி, கோவிந்தபாடி பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்கூடம் கட்டுதல் ஆகிய பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எம்.சி.மாரப்பன், கொளத்தூா் பேரூராட்சி தலைவா் பாலசுப்பிரமணியன் , லக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் அண்ணாதுரை, கொளத்தூா் பேரூராட்சி செயலாளா் கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க