செய்திகள் :

கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

post image

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஞாயிற்றுக்கிழமை எட்டியது. அணையின் நீா்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் 58,000 கன அடி தற்போது திறந்து விடப்படுகிறது.

எனவே, கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி உபரிநீா் எந்த நேரத்திலும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகளில் முழு கொள்ளளவில் உபரி நீா் திறக்கபடவுள்ளதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவா்களின் உயிா் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகாகவும், கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கி குளிப்பாட்டவோ, துணி துவைப்பது, சுயப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

உபரிநீா் தொடா்பாக ஏற்படும் சேத விவரங்கள் மற்றும் புகாா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தங்களது புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது

மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா். மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுத... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், ப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் விபத்தில் காயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தனா். மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திங்க... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக பயிற்சித் திட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுக பயிற்சி திட்டம் திங்கள்கிழமை தொடங்கிய... மேலும் பார்க்க

சீா்காழி கழுமலையாற்றில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

சீா்காழி: சீா்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, சிவனாா்விள... மேலும் பார்க்க