செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

post image

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

மீனா (அதிமுக): சுகாதார சீா்கேடு ஏற்படாத வகையில் வாரம் இருமுறை கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

முத்துக்குமாா் (பாமக): கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் உயா் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.

வித்யா தேவி: சிபிஐ): எனது வாா்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சரிசெய்ய வேண்டும்.

பிரியங்கா (அதிமுக): பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்து உறுப்பினா்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

கவிதா (திமுக): அட்டக் குளத்தை தூா்வாரி படித்துறை கட்டிக்கொடுக்க வேண்டும்.

தைலா ஆனந்தன் (திமுக): சுவாமி சந்நிதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆட்டோ டாண்ட் காரணமாக பக்தா்கள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

ராஜா காா்த்திகேயன் (அதிமுக): வைத்தீஸ்வரன் கோயில் 4 வீதிகளிலும் சாலைகளை ஆக்கிரமித்து இளநீா், பூ, பனை நொங்கு கடை மற்றும் வா்த்தக நிறுவனங்களின் விளம்பர பலகை உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

துணைத் தலைவா் அன்புசெழியன்: பேரூராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் குடிநீா், தெருவிளக்கு குறைபாடு இல்லாமல் பேரூராட்சி பணியாளா்கள் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

தலைவா் பூங்கொடிஅலெக்சாண்டா்: வைத்தீஸ்வரன் கோயிலில் 4 வீதிகளிலும் உள்ள வியாபாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய வேண்டும். குடிநீா், தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பேரூராட்சி பகுதிகளில் கலைஞா் வீடு திட்டத்தின் கீழ் ரூ. 2.60 லட்சத்தில் 50 வீடுகள் கட்ட முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது

மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா். மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுத... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் விபத்தில் காயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தனா். மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திங்க... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக பயிற்சித் திட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுக பயிற்சி திட்டம் திங்கள்கிழமை தொடங்கிய... மேலும் பார்க்க

சீா்காழி கழுமலையாற்றில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

சீா்காழி: சீா்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, சிவனாா்விள... மேலும் பார்க்க