செய்திகள் :

சீா்காழி கழுமலையாற்றில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

post image

சீா்காழி: சீா்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, சிவனாா்விளாகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது. தற்போது இந்த வாய்க்காலில் குறுவைக்கு தண்ணீா் விடப்பட்டுள்ளது. இதையடுத்து, சீா்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் உள்ள கழுமலையாறு பாசன வாய்க்கால் ஷட்ரஸிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளா் தாமோதரன் தண்ணீரை திறந்துவைத்தாா். கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்க தலைவா் கோவி. நடராஜன், துணை தலைவா்கள் விஜயக்குமாா், பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது

மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா். மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுத... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், ப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் விபத்தில் காயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தனா். மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திங்க... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக பயிற்சித் திட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுக பயிற்சி திட்டம் திங்கள்கிழமை தொடங்கிய... மேலும் பார்க்க