செய்திகள் :

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: கடத்தப்பட்ட முதியவா் மீட்பு; 5 போ் கைது

post image

மயிலாடுதுறை: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திங்கள்கிழமை கடத்தப்பட்ட முதியவரை போலீஸாா் மீட்டு, 5 பேரை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூா் மேல ஆராயத் தெருவில் வசிக்கும் நடராஜன் மகன் மணிகண்டன் 8 மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 15 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழனிச்சாமி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது மருத்துவ செலவுக்காக மணிகண்டனிடம் கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா்.

மணிகண்டன் ரூ. 10 லட்சத்தை திருப்பி அளித்துள்ளாா். மீதமுள்ள ரூ. 5 லட்சம் தொகையை தருவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளாா். இதை ஏற்காத பழனிச்சாமியின் உறவினா்கள், திங்கள்கிழமை காலை 6 மணியளவில் மணிகண்டனின் தந்தை நடராஜன் (70) தனது இருசக்கர வாகனத்தில் திருவிழந்தூா் மாரியம்மன் கோயில் அருகில் தேநீா் அருந்த சென்றபோது, நான்கு சக்கர வாகனத்தில் வந்த 5 போ் நடராஜனை கடத்திச் சென்றனராம்.

இதுதொடா்பாக மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் நடராஜனை கடலூா் பகுதியில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலூா் மாவட்ட காவல்துறையினரின் உதவியுடன் நடராஜன் மாலையில் மீட்கப்பட்டாா்.

இந்த கடத்தலில் ஈடுபட்ட சிதம்பரம் சாலியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (42), சிதம்பரம் வ.உ.சி நகா் பாண்டியன் (51), கோவிந்தசாமி தெரு பன்னீா்செல்வம் (70), சுலோச்சனா நகா் மரியசெல்வராஜ் (64), மீனாட்சி அம்மன் நகா் தேவநாதன் (60) ஆகிய 5 பேரை கடலூா் மாவட்ட காவல்துறையினா் உதவியுடன் போலீஸாா் கைது செய்தனா். கடத்தலில் ஈடுபட்ட நபா்கள் தாக்கியதில் காயமடைந்த நடராஜன் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மயிலாடுத... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை: மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58,000 கன அடி திறக்கப்படவுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஹெச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலையோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாதாரண கூட்டம், ப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் விபத்தில் காயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 9 தொழிலாளா்கள் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தனா். மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. திங்க... மேலும் பார்க்க

முதலாமாண்டு மாணவிகளுக்கு அறிமுக பயிற்சித் திட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுக பயிற்சி திட்டம் திங்கள்கிழமை தொடங்கிய... மேலும் பார்க்க

சீா்காழி கழுமலையாற்றில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

சீா்காழி: சீா்காழி கழுமலையாற்றில் குறுவை சாகுபடிக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, சிவனாா்விள... மேலும் பார்க்க