செய்திகள் :

`கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்' - டாக்டர் கிருஷ்ணசாமி

post image

காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு புதிய தமிழகம் கட்சியினர் மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், சங்கரன்கோவிலில் முருகன், பாளையங்கோட்டை சிறையில் முத்துமனோ உள்ளிட்ட அனைத்து காவல் நிலைய மரணங்களுக்கும் நீதி கேட்டும், விசாரணையின் போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்தில், மடப்புரம் அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழக அரசு, காவல் துறையைக் கண்டித்து பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

பின்பு டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரின் சித்திரவதையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்க தக்கது. கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு சிறிய அளவில் திருடும் திருடர்கள், ஏதும் அறியாத அஜித்குமார் போன்றவர்களை காவலர்கள் அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி

அஜித்குமாரின் தம்பி நவீனுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும். அப்போதுதான் தகுதிக்கேற்ப பணி உயர்வு பெறுவார். அதை விட்டுவிட்டு அரசின் சார்பு நிறுவனமான ஆவினில் பணி வழங்கியது ஏற்புடையது அல்ல, இந்த சம்பவத்தில் நீதிமன்றம் உரிய நீதி வழங்கிட வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா பேட்டி

'அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என்று எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி கொடுத்ததற்கு பின்னணி அமித் ஷாவின் ஒரு பேட்டி தான்.மத்திய உள்துறை அமைச்சரி அமித் ஷா 'தி நியூ இந்தியன்... மேலும் பார்க்க

"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" - கேரளாவில் அமித் ஷா

கேரள மாநில பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்துவைத்தார். பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில்... மேலும் பார்க்க

லாக்கப் டெத் - குடும்பங்களை சந்திக்கும் விஜய்! - ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க திட்டம்?

'லாக்கப் மரணங்கள்!'கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்.விஜய்சிவகங்கை மடப்புரத்தில் அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்து... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது..."இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டா... மேலும் பார்க்க

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க