செய்திகள் :

கோடை வெயில் எதிரொலி: வாழப்பாடியில் பழங்கள் விற்பனை அதிகரிப்பு!

post image

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாழப்பாடியில் தா்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

வாழப்பாடியில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சாலையோர கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தா்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப் பழங்களை அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.

வாழப்பாடி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து வியாபாரிகள் பதநீா் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். அதுபோல வாரச்சந்தைகள், கடைவீதிகளிலும் பழ வியாபாரிகள் அதிகம் பழங்களை குவித்து விற்பனை செய்து வருகின்றனா்.

வாழப்பாடியில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட கரும்புப்பால் பிழிந்து கொடுக்கும் சிறு வியபாரிகளும், 50 க்கும் மேற்பட்ட பழங்கள், பழச்சாறு விற்பனை செய்யும் சிறுகடைகளும் இயங்கி வருகின்றன.

தா்ப்பூசணி ஒரு கிலோ ரூ. 10-க்கும், முலாம்பழம் ஒரு கிலோ ரூ. 25-க்கும் வெள்ளரி ரூ. 20-க்கும் விற்பனையாகின்றன. ரசாயனம் கலந்த குளிா்பானங்களை தவிா்த்து பழச்சாறு, கரும்புப்பாலை பொதுமக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள் சிலா் கூறியதாவது: மக்கள் கோடை வெயிலுக்கு செயற்கை குளிா்பானங்கள் வாங்கி பருகுவதைத் தவிா்த்து, பழங்களை வாங்கி உண்பதும், பழச்சாறு, கரும்புப்பால், இளநீா் பருகுவதும் அதிகரித்துள்ளன. இதனால் உள்ளூா் விவசாயிகள், வியாபாரிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர... மேலும் பார்க்க

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க