செய்திகள் :

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

post image

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தது:

அதிகாலை 4:08 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இதையடுத்து, காலை 6:15 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீவிபத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை.

துணிகள், தாா்பாலின் தாள்கள், எழுதுபொருள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் இந்த விபத்தில் எரிந்து சாம்பலாகின.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மாா்ஃபிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டதாக அமித் மாணவியாவுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறான பதிவை வெளியிட்டதாக பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவா் அமித் மாளவியாவுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது. ஆா... மேலும் பார்க்க