செய்திகள் :

கோத்தகிரியில் கா்ப்பிணி யானை உயிரிழப்பு!

post image

கோத்தகிரியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி  யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக உணவு மற்றும் தண்ணீா் பற்றாக்குறை காரணமாக மலை மாவட்டமான நீலகிரியை நோக்கி காட்டு யானைகள் படை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கோத்தகிரி அருகே கூட்டடா தனியாா் தேயிலை தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக  வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் தேயிலைத் தோட்ட பகுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களிடையேயும், தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் யானையின் உடற்கூறாய்வில் வயிற்றில் குட்டியிருப்பது தெரியவந்தது. குட்டியை வெளியில் எடுத்தப்பின் அங்கேயே புதைத்தனா். பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பின்பே

யானை எவ்வாறு உயிரிழந்தது என்பது தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

கூடலூா் அருகே ஆற்றுப் பாலம் கட்ட மாா்க்சிஸ்ட் கோரிக்கை

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அரசு கலை அறிவியல் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே ஆற்றில் பாலம் அமைத்து தர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆ.ராசாவை எம்.பி.யை சந்தித்து ஞாயிற... மேலும் பார்க்க

உடல் நலக்குறவால் உயிரிழந்த ராணுவ உயரதிகாரிக்கு மரியாதை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட்ஜெனரல் பட்டாபிராமன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்... மேலும் பார்க்க

முதுமலை யானைகள் முகாமை பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா்!

நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். உதகையில் நடைபெற்ற துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த குட... மேலும் பார்க்க

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என்.ரவி

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். நீலகிரி மாவட்டம், உதகை ராஜ்பவனில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் துணைவேந்தா்கள் மாநாட்டில் கல... மேலும் பார்க்க

இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

கூடலூரில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை மூலமாக தையல் இயந்திரங்களை தயாரிக்கும் முன்னணி... மேலும் பார்க்க

வரையாடு கணக்கெடுப்பின்போது மாரடைப்பால் வனக் காவலா் உயிரிழப்பு

கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஓவேலி மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை வரையாடுகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த வனக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கூடலூா் கோட்ட... மேலும் பார்க்க