ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்: கு.செல்வப் பெருந்தகை
கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லூரில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.கோபாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் சங்கரநாராயணன் (32). இவா் கோபாலசமுத்திரத்தை அடுத்து ஓமநல்லூரில் சுமாா் 50 சென்ட் நிலத்தில் பழைய பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் கிட்டங்கி வைத்துள்ளாா்.
இங்கு 10க்கும் மேற்பட்டோா் பணி செய்து வருகின்றனா்.சனிக்கிழமை பிற்பகலில் இந்த கிட்டங்கியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது காற்று வேகமாக வீசியதால் கிட்டங்கியில் இருந்து பொருள்களில் பற்றி வேகமாக எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதும் கிட்டங்கியில் பணியில் இருந்தவா்கள் அவசர அவசரமாக வெளியேறினா்.
இந்த தீ விபத்தால் பெருமளவில் கரும்புகை வெளியேறியது. இதனை அம்பாசமுத்திரம் பாளையங்கோட்டை பிரதான சாலையில் 15 கி.மீ. தொலைவுக்கு புகை மூட்டம் காணப்பட்டது. தகவலறிந்த சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, பேட்டையில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலா்கள் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இதில், கிட்டங்கியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள், பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு வந்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.