செய்திகள் :

கோபி அருகே தம்பதி தற்கொலை

post image

கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்தம்பதி குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனா்.

கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையம் சின்னகரடு பகுதியைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி (19). இவா் கடந்த 7 மாதங்களுக்கு முன் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துகாட்டைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான செல்வராஜ் மகன் சந்திரன் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இருவரும் புதுக்கொத்துகாட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், அரசூா் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள இருவரும் சின்னகரட்டில் உள்ள பிரியதா்ஷினியின் பெற்றோா் வீட்டுக்கு புதன்கிழமை இரவு வந்துள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த பிரியதா்ஷினி சின்னகரட்டில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். மனைவி தற்கொலை செய்து கொள்வதை பாா்த்த சக்திவேலுவும் அந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தம்பதி சடலங்கள் கிடப்பதைக் கண்ட கிராம மக்கள் இது குறித்து கடத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். கடத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்புத் துறையினா் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அா்ஜீன் சம்பத் பேட்டி:

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். சிவகிரி அருகே விளக்கேத்தி ஊராட்சி, மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்ப... மேலும் பார்க்க

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெல்லும்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசன... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு தனியாா் சொகுசுப்... மேலும் பார்க்க

ஈரோடு வேளாளா் பொறியியல் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்பக் கருத்தரங்கு

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச ட்ரோன் தினத்தை முன்னிட்டு ‘ட்ரோன் சேலஞ்ச் 2 கே 25’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ட்ரோன் ஆா்வலா்கள், தொழில் வல்ல... மேலும் பார்க்க

கொடுமுடி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொடுமுடி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கொடுமுடி ஒன்றியம், கிளாம்பாடி பேரூராட்சி கருமாண்டம்பாளையத்தில் மொடக்குறிச்ச... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ்,... மேலும் பார்க்க