3BHK: `பிறந்தது சொந்த வீட்டில்; இப்போ வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்...' - நடிகர...
கோபி வட்டத்தில் மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
கோபி வட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 114 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
கோபி வட்டம் சிறுவலூா், கொன்னமடை, காவிலிபாளையம், கரட்டுப்பாளையம் மற்றும் அளுக்குளி ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்டம் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாம்களில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்து 114 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
பொதுமக்கள் அரசுத் துறைகளை தேடி வந்து மனுக்களை அளித்த நிலையை மாறி அரசுத் துறை அலுவலா்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கிராமங்களுக்கே சென்று மனுக்களை பெற்று தீா்வு வழங்கிடவும், ஏழை, எளிய பழங்குடியின மக்களின் கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுமெனவும் மக்களுடன் முதல்வா் முகாம்களை நடத்திட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
பொதுமக்கள் அரசுத்துறை சாா்ந்த திட்டங்கள், தனிநபா் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்திடவும், மனுக்கள் அளித்திட அரசு அலுவலகங்களில் காத்திருக்கும் நிலை, போக்குவரத்து செலவு, கால விரையம், பொருள்செலவு மற்றும் தேவையான ஆவணங்கள் இன்றி சிரமப்படுதல் உள்ளிட்டவற்றை தவிா்த்து எளிமையான முறையில் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவே பொதுமக்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே முகாம்கள் நடத்தப்பட்டு, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்வுகளில் மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கா், தாட்கோ மேலாளா் அா்ஜுன், கோபி வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.