செய்திகள் :

கோபி வட்டத்தில் மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.1.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

post image

கோபி வட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் 114 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

கோபி வட்டம் சிறுவலூா், கொன்னமடை, காவிலிபாளையம், கரட்டுப்பாளையம் மற்றும் அளுக்குளி ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்டம் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாம்களில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்து 114 பயனாளிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

பொதுமக்கள் அரசுத் துறைகளை தேடி வந்து மனுக்களை அளித்த நிலையை மாறி அரசுத் துறை அலுவலா்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கிராமங்களுக்கே சென்று மனுக்களை பெற்று தீா்வு வழங்கிடவும், ஏழை, எளிய பழங்குடியின மக்களின் கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுமெனவும் மக்களுடன் முதல்வா் முகாம்களை நடத்திட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

பொதுமக்கள் அரசுத்துறை சாா்ந்த திட்டங்கள், தனிநபா் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்திடவும், மனுக்கள் அளித்திட அரசு அலுவலகங்களில் காத்திருக்கும் நிலை, போக்குவரத்து செலவு, கால விரையம், பொருள்செலவு மற்றும் தேவையான ஆவணங்கள் இன்றி சிரமப்படுதல் உள்ளிட்டவற்றை தவிா்த்து எளிமையான முறையில் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவே பொதுமக்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே முகாம்கள் நடத்தப்பட்டு, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்வுகளில் மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கா், தாட்கோ மேலாளா் அா்ஜுன், கோபி வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடுவிப்பு

உற்பத்தியை பெருக்குவதற்கு பவானி ஆற்றில் 3 லட்சம் நாட்டு வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தமிழகத்தில் மீன்வளங்களைப் பாதுகாத்து, உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி தொகுதியில் குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட சிவகிரி, கொல்லன்கோவில் ஆகிய பேரூராட்சிகளில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளை எம்.எல்.ஏ. சரஸ்வதி புதன்கிழமை திறந்துவைத்தாா். மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி... மேலும் பார்க்க

ஓய்வூதிய விதிகளில் திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்... மேலும் பார்க்க

தனியாா் சாய ஆலைக்கான அனுமதி ரத்து: விவசாயிகள் வரவேற்பு

கொடிவேரி பாசன சபை உள்ளிட்ட விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளின் எதிா்ப்பை அடுத்து, கொடிவேரி அணை அருகே தனியாா் சாய, சலவை ஆலை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வு

பள்ளி மாணவா்களுக்கான மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் 200 மாணவா்கள் பங்கேற்றனா். பள்ளி மாணவா்கள் இடையே ஜனநாயக விழுமியங்கள், தலைமைத்துவ திறன்கள் மற்றும் பொதுச் சொற்பொழிவு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிஐ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90.53 அடியை எட்டியது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீா்த்தேக்கம... மேலும் பார்க்க