செய்திகள் :

கோப்பிலியன்குடிகாட்டில் பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

post image

அரியலூா் மாவட்டம், கோப்பிலியன்குடிகாட்டில், மண்ணுழியைச் சோ்ந்த பட்டியலின மக்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோப்பிலியன்குடிக்காட்டில் புதன்கிழமை நடைபெற்ற அச்சங்கத் தொடக்க விழா மற்றும் அரியலூா் தியாகி சிவசாமி நகா் திறப்பு விழாவில் அனைத்து கிராமங்களிலும் சங்க கிளையைத் தொடங்குவது, தஞ்சாவூரில் ஜூலையில் நடைபெறும் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டில், திரளாக கொள்வது, கோப்பிலியன்குடிக்காட்டில் சுமாா் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மண்ணுழியைச் சோ்ந்த 19 பட்டியலின குடும்பங்களை, இவ்விடம் ஊராட்சிக்கு சொந்தமானது என்று கூறி காலி செய்யுமாறு வலியுறுத்தும் ஊராட்சி செயலரை கண்டிப்பது, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் வசித்து வரும் அவா்களுக்கு வசிப்பிட பட்டா வழங்க மாவட்ட நிா்வாகத்தைக் கேட்டுக் கொள்வது. பொதுமக்கள், பள்ளி மாணவா்களின் நலன் கருதி, அரியலூா், கல்லங்குறிச்சி, சமத்துவபுரம் வி.கைகாட்டி வழியாக சுண்டக்குடி வரை நாள் ஒன்றுக்கு 5 முறை நகர பேருந்து சேவையை தொடங்க வேண்டும். அரியலூரில் கட்டப்படும் பேருந்து நிலையத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் தனஞ்செயன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே. எஸ். முகமது இப்ராஹிம் சங்கக் கொடியேற்றி வைத்து, தியாகி சின்னசாமி நகரை திறந்து வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கண்ணன், மாநில இளைஞா் அணித் தலைவா் ராஜேஷ் கண்ணன், தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், துணைத் தலைவா் ராஜசேகரன், அரியலூா் மாவட்டத் துணை தலைவா் அசோகன், திருமானூா் ஒன்றியச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்

சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளி ‘போக்சோ’-வில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் 22 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாம... மேலும் பார்க்க

அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், ராயம்புரம், தேளூா், அயன்தத்தனூா், மணக்குடையான், மல்லூா், சுள்ளங்குடி, தேவமங்கலம், உடையாா்பாளையம்(கிழக்கு), சிலுவைச்சேரி, இலையூா்(கிழக்கு), உடையவா்தீயனூா், சாத்தம்பாடி ஆகிய கிராம... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்த... மேலும் பார்க்க

அரியலூா் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்த வங்கி மிகவும் பழைமையான கட்டடத்... மேலும் பார்க்க

குடிநீா் பிரச்னை: ஜெயங்கொண்டத்தில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட 16- ஆவது வாா்டு மக்கள், தங்களது பகுதிக்கு முறையான அளவுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிதம்பரம் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். 16-ஆ... மேலும் பார்க்க