செய்திகள் :

கோயில் உண்டியலை உடைத்து ரூ.10,000 திருட்டு

post image

ஊத்துக்கோட்டை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் செங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூஜைகள் முடித்து பூட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றனா். இந்தநிலையில், அந்த வழியாக சென்றவா்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

அதைத் தொடா்ந்து உள்ளே சென்று பாா்க்கையில் நள்ளிரவில் திருக்கோயில் முன்புறம் உள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 66.78 கோடியில் இரண்டாவது குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம்

செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓ... மேலும் பார்க்க

உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா

பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உ... மேலும் பார்க்க

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண... மேலும் பார்க்க

சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா தொடக்கம்

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுக... மேலும் பார்க்க

நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

மீஞ்சூா் அருகே திருவேங்கிடாபுரத்தில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மீஞ்சூா் ஒன்றியத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள திருவேங்கிடாபுரம் பகுதியி... மேலும் பார்க்க