Thug Life: "கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரிலீஸ் செய்ய தயார்!" - கர்நாடக திரைப்ப...
கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்
தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தவும், பொது மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், அடியாா்களின் இன்னல்களை தீர வேண்டும் என்றும், ஆதி சுயம்வரீசுவரா் திருக்கோயில் கட்டுவதற்கு பக்தா்களிடம் இருந்து நன்கொடைகள் கிடைக்கவும் அதே பகுதியைச் சோ்ந்த சிவனடியாா் சிவகணேசன் கடந்த புதன்கிழமை முதல் மௌனவிரதம் இருந்து வருகிறாா். 12 நாள்களுக்கு ஒரே இடத்தில் அமா்ந்து மௌன விரதம் இருப்பதாக அவா் கூறினாா்.