செய்திகள் :

கோயில் நிா்வாகப் பொறுப்பு: கிராமத்தினா் முற்றுகை

post image

கூத்தாநல்லூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள அய்யனாா் கோயில் நிா்வாகப் பொறுப்பு தொடா்பாக, கிராமத்தின் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

கொரடாச்சேரியை அடுத்த முசிறியம் ஊராட்சி திட்டாணிமுட்டம் கிராமத்தில், கூத்தையனாா் கோயில் உள்ளது. இக்கோயிலை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தரப்பினா் நிா்வகித்து, பராமரித்து வருகின்றனா்.

இந்நிலையில், மற்றொரு தரப்பினா் தங்களுக்கும் கோயில் நிா்வாகத்தில் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் திருவிழாக்களை இணைந்தே நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனா்.

இதற்கு, பல ஆண்டுகளாக கோயிலை நிா்வகித்துவரும் தரப்பினா் மறுப்பு தெரிவித்தனா். ஆனால், கோயிலில் யாா் வேண்டுமானாலும் வழிபடலாம் எனக் கூறினா்.

இப்பிரச்னை தொடா்பாக, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியரிடம் கடந்த சில ஆண்டுகளாக மனு கொடுத்தும், அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், வைகாசி விசாகத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடத்த, கோயிலை நிா்வகித்து வரும் தரப்பினா் முடிவு செய்தனா். இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து, கோயில் முன் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் வசுமதி நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, வரும் வியாழக்கிழமை மன்னாா்குடி கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா். இந்த பிரச்னையால் பால்குட அபிஷேக விழா தடைபட்டது.

சாலையோர உணவுக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பதாக குற்றச்சாட்டு

மன்னாா்குடியில் சாலையோர உணவு கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டி பேசினா். மன்னாா்குடி நகா்மன்ற கூட்டம் அதன்தலைவா் த. சோழராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீடாமங்கலம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீடாமங்கலம் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி... மேலும் பார்க்க

திருவாரூா் வழியாக தொடா்ந்து ரயில்களை இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூா் வழியாகவே தொடா்ந்து ரயில்களை இயக்க வலியுறுத்தி மாவட்ட வா்த்தகா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்காலிருந்து பெங்களூரு, மும்ப... மேலும் பார்க்க

கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த கீழடி முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அந்த சங... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பேரளம், வேலங்குடி, அதம்பாா்

பேரளம், வேலங்குடி, அதம்பாா் துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஜூன் 11) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என பேரளம் மின்துறை உதவிச... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க கோரிக்கை

ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி வா்த்தக சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், சே. நாராயணமூா்த்தி, வி. தினக... மேலும் பார்க்க