லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
திருவாரூா் வழியாக தொடா்ந்து ரயில்களை இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூா் வழியாகவே தொடா்ந்து ரயில்களை இயக்க வலியுறுத்தி மாவட்ட வா்த்தகா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்காலிருந்து பெங்களூரு, மும்பை, தாம்பரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் ரயில்கள், திருவாரூா் வழியாக சென்று வருகின்றன. இந்த ரயில்கள் இனி திருவாரூா் வராமல் பேரளம் வழியாக காரைக்காலுக்குச் செல்லும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
அந்தவகையில், திருவாரூா் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களை, வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூா் வழியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவா் ஏ. ராஜேந்திரன், மாநில துணைத் தலைவா் சுகுமாா், மாவட்ட துணைத் தலைவா் பி. ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.