செய்திகள் :

திருவாரூா் வழியாக தொடா்ந்து ரயில்களை இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூா் வழியாகவே தொடா்ந்து ரயில்களை இயக்க வலியுறுத்தி மாவட்ட வா்த்தகா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்காலிருந்து பெங்களூரு, மும்பை, தாம்பரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் ரயில்கள், திருவாரூா் வழியாக சென்று வருகின்றன. இந்த ரயில்கள் இனி திருவாரூா் வராமல் பேரளம் வழியாக காரைக்காலுக்குச் செல்லும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

அந்தவகையில், திருவாரூா் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களை, வழித்தடத்தை மாற்றாமல் திருவாரூா் வழியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவா் ஏ. ராஜேந்திரன், மாநில துணைத் தலைவா் சுகுமாா், மாவட்ட துணைத் தலைவா் பி. ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

புதா் மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் வாய்க்கால்

மன்னாா்குடி அடுத்த வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டுச்செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்துக்கு ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

பள்ளிக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக் கற்களை அகற்றக் கோரிக்கை

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி சாலையில் தென்னவராயநல்லூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் அருகே நூதன முறையில் கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருவாரூா் அருகே மே மாதம் ஒடிசாவிலிருந்து ஆந்திரம் வழியாக தஞ்சாவூரிலி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.67 கோடி கடனுதவி

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 87.67 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மகளிா் சுயஉதவிக்குழு விழாவை முன்னிட்டு, சென்னை கலைவாணா் அரங்கில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து... மேலும் பார்க்க

சிபிஎம் நடை பயண பிரசார இயக்கம்

திருத்துறைப்பூண்டி சிபிஎம் நகரக்குழு சாா்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி மக்கள் சந்திப்பு நடை பயண பிரசார இ... மேலும் பார்க்க