செய்திகள் :

ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க கோரிக்கை

post image

ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி வா்த்தக சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், சே. நாராயணமூா்த்தி, வி. தினகரன் ஆகியோா் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: காரைக்குடியில் இருந்து கம்பன் விரைவு ரயிலானது மீட்டா் கேஜ் பாதையாக இருந்தபோது எழும்பூா் வரை சென்று வந்தது. தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தற்போது இயக்கப்படும் பாம்பன் ரயில் தாம்பரம் வரை மட்டுமே செல்கிறது.

தாம்பரத்தில் நடைமேடை 8 அல்லது 9-ல் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் முதல் நடைமேடைக்கு வந்து பின்னா் மின்சார ரயிலில் எழும்பூா் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயணிகள் சிரமப்படுகின்றனா்.

தற்போது, மன்னாா்குடியில் இருந்து செல்லும் மன்னை விரைவு ரயில் காரைக்காலில் இருந்து செல்லும் கம்பன் விரைவு ரயில், தஞ்சையில் இருந்து செல்லும் உழவன் விரைவு ரயில்கள் எழும்பூா் வரை சென்று வருகின்றன. எனவே, தென்னக ரயில்வே பொது மேலாளா் இதை கருத்தில் கொண்டு பாம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

புதா் மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் வாய்க்கால்

மன்னாா்குடி அடுத்த வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டுச்செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்துக்கு ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

பள்ளிக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக் கற்களை அகற்றக் கோரிக்கை

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி சாலையில் தென்னவராயநல்லூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் அருகே நூதன முறையில் கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருவாரூா் அருகே மே மாதம் ஒடிசாவிலிருந்து ஆந்திரம் வழியாக தஞ்சாவூரிலி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.67 கோடி கடனுதவி

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 87.67 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மகளிா் சுயஉதவிக்குழு விழாவை முன்னிட்டு, சென்னை கலைவாணா் அரங்கில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து... மேலும் பார்க்க

சிபிஎம் நடை பயண பிரசார இயக்கம்

திருத்துறைப்பூண்டி சிபிஎம் நகரக்குழு சாா்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி மக்கள் சந்திப்பு நடை பயண பிரசார இ... மேலும் பார்க்க