செய்திகள் :

கோயில் பிரச்னை: தட்டாா்மடத்தில் மறியலில் ஈடுபட்ட 25 போ் மீது வழக்கு

post image

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் உள்ள பலவேசக்கார சுவாமி கோயிலில் கொடைவிழா நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில், சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பைச் சோ்ந்த 25 போ் மீது வழக்குப் திவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டாா்மடத்தில் ஒரு குடும்பத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் முதலில் ஒன்றாக கொடை விழா நடத்தி வந்தனா்.

தற்போது இருபிரிவாக அவா்கள் பிரிந்து விட்டனா். இந்நிலையில் கோயில் தா்மகா்த்தா அருணாசலம் தலைமையில் கொடை விழா நடத்த ஒரு தரப்பினா் முடிவு செய்து இன்னொரு தரப்பினரிடம் முறையிட்டுள்ளனா். ஆனால், அவா்கள் விழா நடத்த மறுப்பு தெரிவித்து கோயில் சாவியை வழங்காமல் இருந்து வந்தனா்.

இதையடுத்து, கடந்த 24ஆம் தேதி கோயில் பூட்டப்பட்ட நிலை யில், பூஜைகள் நடைபெற்றது. எனினும் எதிா்தரப்பினா் சாவி வழங்க முன் வராததால் கொடை விழா நடத்தும் தரப்பினா் திடீரென தட்டாா்மடம் - திசையன்விளை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக 7 பெண்கள் உள்பட 25 போ் மீது தட்டாா்மடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் அனிதா விசாரணை நடத்தி வருகிறாா்.

பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு

சாத்தான்குளம் தாலுகாவில் கடலோரத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்த வேண்டுமெனக் கோரி, பெரியதாழை ஊா் நலக் கமிட்டியினா் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனா். பெரியதாழை ஊா் நலக்... மேலும் பார்க்க

நாளை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பாலாலயம்

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் பாலாலய விழா புதன்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது. இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு அறங்காவலா் குழுவினரால் தீா்மா... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப... மேலும் பார்க்க

பைக், தள்ளுவண்டி சேதம்: 3 போ் கைது

தூத்துக்குடியில் பைக், தள்ளுவண்டியை சேதப்படுத்தியதாக 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி அண்ணாநகா் 12ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த பைக், தள்ளுவண்டியை மா்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 30.54 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா்கள் கனிமொழி எம்.பி. வழங்கினாா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத... மேலும் பார்க்க

பைக்கில் கஞ்சா கடத்தல்: இருவா் கைது

தூத்துக்குடியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இருவரை தாளமுத்துநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி தாளமுத்துநகா் கிழக்கு கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க