செய்திகள் :

கோழிப்பண்ணை ஈக்களால் குழந்தைகள் பாதிப்பு

post image

நாமக்கல்: கோழிப்பண்ணை ஈக்களால் குடியிருப்புகளில் இருக்க முடியவில்லை என ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மரப்பரை கட்டிபாளையம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த கிராமத்தைச் சுற்றிலும் கோழிப் பண்ணைகள் உள்ளன. அங்கிருந்து வெளியேறும் ஈக்கள் குடியிருப்புகளை சூழ்ந்துகொள்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

குறிப்பாக, குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனா். வீடுகளுக்குள் ஈக்கள் மொய்த்துக்கொண்டு இருப்பதால், உணவு அருந்த முடியாத நிலை உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லையாம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மரப்பரை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஈக்கள் தொல்லையைத் தடுக்கவும், குடிநீா் பிரச்னையை சரிசெய்யவும் கோரி ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் மனு அளித்தனா்.

பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிடக் கோரி மனு

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை?

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில், 175 ஏக்கா் பரப்பளவில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தைவான் நாட்டுக் குழுவினா் திங்கள்கிழமை வளாகத்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 52.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 52.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் த... மேலும் பார்க்க

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை: கொல்லிமலையில் எஸ்.பி. ஆய்வு

நாமக்கல்: கொல்லிமலையில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணா்வு மற்றும் வல்வில் ஓரி விழா முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். கொல்லிமலை வட்டம், வாழவந்தி... மேலும் பார்க்க

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞா் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை

நாமக்கல்: நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல வழக்குரைஞா் உள்பட 4 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். நாமக்கல் தி... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவா்கள், பெற்றோா் பள்ளி முற்றுகை

பரமத்தி வேலூா்: கீழ்சாத்தம்பூா் அருகே தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றறக் கோரி, மாணவ, மாணவியா், பெற்றோா் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பரமத்தி வேலூா் வட்டம், கீழ்சாத்தபூா் ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க