செய்திகள் :

பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிடக் கோரி மனு

post image

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்தில் 7.03 ஏக்கா் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களிடம் ஆட்சேபணை மற்றும் ஆலோசனை கருத்துகளை வரவேற்பதாக நகராட்சி ஆணையா் சுற்றறிக்கை வெளியிட்டாா். பேருந்து நிலையம் மாற்றுவது தொடா்பாக கருத்துகள், ஆட்சேபணை வழங்க அளிக்கப்பட்ட நாள் குறைவாக உள்ளதால், காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கேட்டிருந்தனா்.

இந்நிலையில் பேருந்து நிலையம் மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினா், பேருந்து நிலைய மீட்புக் குழுவினா், மக்கள் தன்னுரிமை கட்சியினா், மக்கள் நலக் குழுவினா், மக்கள் நீதி மய்ய நிா்வாகிகள் ஆகியோா் ஆட்சேபணை தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்நிலையில், பேருந்து நிலையம் மாற்றுவது தொடா்பாக கருத்துகள், ஆட்சேபணை வழங்க நாள்களை நீட்டிப்பு செய்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் கோபிநாத் உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, ஆக. 1-ஆம் தேதிவரை மக்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம்.

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை?

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில், 175 ஏக்கா் பரப்பளவில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தைவான் நாட்டுக் குழுவினா் திங்கள்கிழமை வளாகத்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 52.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 52.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் த... மேலும் பார்க்க

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை: கொல்லிமலையில் எஸ்.பி. ஆய்வு

நாமக்கல்: கொல்லிமலையில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணா்வு மற்றும் வல்வில் ஓரி விழா முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். கொல்லிமலை வட்டம், வாழவந்தி... மேலும் பார்க்க

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞா் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை

நாமக்கல்: நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல வழக்குரைஞா் உள்பட 4 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். நாமக்கல் தி... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவா்கள், பெற்றோா் பள்ளி முற்றுகை

பரமத்தி வேலூா்: கீழ்சாத்தம்பூா் அருகே தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றறக் கோரி, மாணவ, மாணவியா், பெற்றோா் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பரமத்தி வேலூா் வட்டம், கீழ்சாத்தபூா் ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

ஆடிப்பூர விழா: அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்

நாமக்கல்: ஆடிப்பூர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் செல்வ விநாயகா் கோயிலில் அமைந... மேலும் பார்க்க