செய்திகள் :

கோவிலூரில் பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள கோவிலூா் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்த விநியோகத்தால் மின் பொருள்களை இயக்க இயலாததைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோவிலூா் கிராமத்தில், கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள குறைந்த மின் அழுத்தம் (லோ வோல்டேஜ் ) காரணமாக மின் சாதனம், மோட்டாா் பம்ப் போன்றவற்றை இயக்க முடியாமல், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், செவ்வாய்க்கிழமை கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்தை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருமானூா் காவல் நிலை உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் ஏலாக்குறிச்சி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் 15 நாள்களுக்குள் புதிய மின்மாற்றிஅமைத்து, மின் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா். பொதுமக்களின் சாலை மறியலால் கோவிலூா் - ஆண்டிப்பட்டக்காடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூரில் ரூ.9.28 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அரியலூா் சத்யா நகா், பெரியாா் நகா், அழகப்பா நகா், சஞ்சீவிர... மேலும் பார்க்க

சோழகங்கம் ஏரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ... மேலும் பார்க்க

மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

காட்டைத் திருத்தி, கிராமங்கள், நகரங்களை உருவாக்கிய மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை

அரியலூா் பேருந்து நிலையம் அருகே வண்ணாங்குட்டை பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற... மேலும் பார்க்க