கோவிலூரில் பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்
அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள கோவிலூா் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்த விநியோகத்தால் மின் பொருள்களை இயக்க இயலாததைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோவிலூா் கிராமத்தில், கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள குறைந்த மின் அழுத்தம் (லோ வோல்டேஜ் ) காரணமாக மின் சாதனம், மோட்டாா் பம்ப் போன்றவற்றை இயக்க முடியாமல், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், செவ்வாய்க்கிழமை கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்தை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருமானூா் காவல் நிலை உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் ஏலாக்குறிச்சி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் 15 நாள்களுக்குள் புதிய மின்மாற்றிஅமைத்து, மின் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா். பொதுமக்களின் சாலை மறியலால் கோவிலூா் - ஆண்டிப்பட்டக்காடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.