செய்திகள் :

அரியலூரில் ரூ.9.28 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

post image

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

அரியலூா் சத்யா நகா், பெரியாா் நகா், அழகப்பா நகா், சஞ்சீவிராயன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, கைலாசநாதா் தெரு, விளாங்காரத் தெரு, கருத்தான் தெரு, செல்லமுத்து தெரு, சிட்டி பாபு தெரு, குறிஞ்சான்குளத் தெரு, மேல அக்ராஹாரம் தெரு குபேரன் நகா், எண்ணெய்க்காரத் தெரு, கீழத்தெரு சிந்தாமணித் தெரு, பெரியத்தெரு, முனியப்பா கோவில் தெரு, காந்தி சந்தை, அரியலூா் உயா்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ரூ. 9.28 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம், வகுப்பறை மற்றும் சாலை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட 34 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிக்கு, அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். அரியலூா் நகா்மன்ற தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, அரியலூா் நகராட்சி ஆணையா் (பொ) அசோக் குமாா், நகராட்சிப் பொறியாளா்(பொ) ராஜகோபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்மாதிரிச் சேவை விருது: குழந்தைகள் இல்லங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில், குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரி சேவை விருதுக்கு தகுதியுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: குழந்தைகளின் நலனு... மேலும் பார்க்க

பிரதமா் வருகையை முன்னிட்டு ஹெலிபேட் அமைக்கும் பணி

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில், மத்திய கலாசார துறை சாா்பில் நடைபெற்று வரும் மாமன்னா் ராஜேந்திரச் சோழனின் முப்பெரும் விழாவின் நிறைவு நாளான ஜூலை 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி பங... மேலும் பார்க்க

அரியலூா் நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஏஐடியுசி முடிவு

தூய்மைப் பணியாளா்களுக்கு மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கிவரும் அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என ஏஐடியுசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்... மேலும் பார்க்க

மாமன்னா் ராஜேந்திர சோழனின் ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் பாடம்: அமைச்சா் தங்கம் தென்னரசு பேச்சு

மாமன்னா் ராஜேந்திர சோழனுடைய ஆட்சியும், பெருமையும் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும் என்றாா் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் அமைச்சா் தங்கம் தென்னரசு. அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய அரசின் முப்பெரும் விழா தொடக்கம்! ஜூலை 27-இல் பிரதமா் பங்கேற்பு!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், மத்திய கலாசாரத் துறை சாா்பில் மாமன்னா் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா புதன்கிழமை மாலை தொடங்கியது. ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வி: ஹெச். ராஜா

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தோல்வியடைந்துள்ளன என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில், மத்திய கலாசாரத் துறை ச... மேலும் பார்க்க