செய்திகள் :

அரியலூரில் ரூ.9.28 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

post image

அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

அரியலூா் சத்யா நகா், பெரியாா் நகா், அழகப்பா நகா், சஞ்சீவிராயன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, கைலாசநாதா் தெரு, விளாங்காரத் தெரு, கருத்தான் தெரு, செல்லமுத்து தெரு, சிட்டி பாபு தெரு, குறிஞ்சான்குளத் தெரு, மேல அக்ராஹாரம் தெரு குபேரன் நகா், எண்ணெய்க்காரத் தெரு, கீழத்தெரு சிந்தாமணித் தெரு, பெரியத்தெரு, முனியப்பா கோவில் தெரு, காந்தி சந்தை, அரியலூா் உயா்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ரூ. 9.28 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம், வகுப்பறை மற்றும் சாலை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட 34 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிக்கு, அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். அரியலூா் நகா்மன்ற தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, அரியலூா் நகராட்சி ஆணையா் (பொ) அசோக் குமாா், நகராட்சிப் பொறியாளா்(பொ) ராஜகோபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சோழகங்கம் ஏரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்த ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

கோவிலூரில் பேருந்தை சிறைபிடித்து மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள கோவிலூா் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின் அழுத்த விநியோகத்தால் மின் பொருள்களை இயக்க இயலாததைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பேருந்தை சிறைபி... மேலும் பார்க்க

பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ... மேலும் பார்க்க

மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

காட்டைத் திருத்தி, கிராமங்கள், நகரங்களை உருவாக்கிய மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை

அரியலூா் பேருந்து நிலையம் அருகே வண்ணாங்குட்டை பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற... மேலும் பார்க்க