`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
கோவில்பட்டியில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எட்டயபுரம் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்-பராமரிப்பு உள்கோட்டத்தில் வேலை செய்யும் சாலைப் பணியாளா்களுக்கு ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க வட்டத் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். வட்டச் செயலா் மாரிமுத்து, மாநிலத் தலைவா் சண்முகராஜா ஆகியோா் பேசினா். சங்க உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.