செய்திகள் :

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் கொலை

post image

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் உட்பட 2 பேரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் மகன் பிரகதீஷ் (20). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலையூர் சாலையில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் போலீஸார் சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் புது கிராமம் செண்பக நகர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்மகும்பல் பாஸ்கரன் மனைவி கஸ்தூரி (48) மற்றும் அவரது சகோதரர் சண்முகசுந்தரம் மகன் செண்பகராஜ் (44) ஆகிய இருவரையும் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி யோடிவிட்டனர்.

சர்வதேச விரிவாக்கத்திற்காக 30 ஏ-350 விமானங்களை கொள்முதல் செய்யும் இண்டிகோ!

இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த செண்பகராஜை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரு கொலை சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பழிக்குப் பழி கொலையாக இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் இரட்டை கொலை நடந்ததை எடுத்து வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில் பிரகதீஷ் சடலத்தையும் போலீஸார் உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க