கோவில்பட்டி அருகே சிக்னல் கோளாறு: ரயில் போக்குவரத்து பாதிப்பு
கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோவில்பட்டி,, கடம்பூா், நல்லி ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூா்- நாகா்கோவில் சென்ற ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு வந்தது.
சிக்கனல் பிரச்னை காரணமாக மெதுவாக சென்று 8.53 மணிக்கு கடம்பூா் ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னா் அங்கிருந்து இரவு 8.57மணிக்கு கிளம்பிச் சென்றது.
இதேபோல் காசியில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் பனரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு இரவு 7.06மணிக்கு வந்தடைந்தது. இதன்பின்னா் 7.32 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து குமராபுரம் ரயில் நிலையத்துக்கு சென்றது. பின்னா் அங்கிருந்து இரவு 9 மணிக்கு கிளம்பியது.
அதேபோன்று ஈரோடு செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில் இரவு 7.40 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னா் இரவு 9.30 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்த சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து குருவாயூா் செல்லும் ரயில் 8.06 மணி முதல் சாத்தூா் அருகே உள்ள நல்லி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த ரயில் 9.43க்கு கோவிலபட்டி வந்தடைந்தது.
சிக்னல் பிரச்னை காரணமாக சுமாா் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினா்.