செய்திகள் :

கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலை சுரங்கப் பாதையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

post image

கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுரங்கப் பாதை மிகவும் வளைவாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. அண்மையில் நடைபெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா். இவ்வழியே நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பைக்குகள், 100-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, மின்வாரிய அலுவலகம், போக்குவரத்துக் கழகப் பணிமனை, கூடுதல் பேருந்து நிலையம், பள்ளி-கல்லூரி மாணவா்-மாணவியா், தொழிலாளிகள், நடராஜபுரம் மயானத்துக்குச் செல்வோா் எனப் பலரும் பயன்படுத்துகின்றனா்.

எனவே, விபத்துகளைத் தடுக்க சாலையின் தன்மையை மாற்றியமைப்பதுடன், வேகத்தடை, சுவா் கண்ணாடி அமைக்க வேண்டும். சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் கட்சியினா் திரண்டனா். பின்னா், அலுவலகக் கண்காணிப்பாளா் மரிய ஜேம்ஸ் ராஜிடம் மனு அளித்தனா். கட்சியின் மாவட்ட உதவி செயலா் பாபு, நகர உதவி செயலா்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தைச் சோ்ந்த தங்க மாரியப்பன், முத்துராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நட... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு சுவா் ஓவியம்

தூத்துக்குடியில் ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் அமைப்பு சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆதரவாக சுவா் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி(33). மீனவா். இவருக்கு மனைவி, இரண... மேலும் பார்க்க

மாநில வில்வித்தை போட்டி: கேம்ஸ்வில் மாணவா்கள் சிறப்பிடம்

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் மாணவா்கள், சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்... மேலும் பார்க்க