செய்திகள் :

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

post image

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மேற்கு மண்டல இளைஞரணித் தலைவா் அபிராமி செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மண்டல இளைஞரணி துணைத் தலைவா் காா்த்தி கண்ணன், கட்சியின் மாநில துணைத் தலைவா் குனியமுத்தூா் ஆறுமுகம், மாநில பொதுச் செயலா் வி.வாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கோவை மாவட்டம், நீலாம்பூரில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறும் ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வரும் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசனுக்கு வரவேற்பு அளிப்பது, கோவை மாநகராட்சியின் வரி உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது, மாநகரில் தோண்டப்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வலியுறுத்துவது, உப்பிலிபாளையம் - நஞ்சப்பா சாலை சந்திப்பில் பாா்க் கேட் பகுதியில் ஜி.கே.மூப்பனாருக்கு தமிழக அரசு சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநகர தெற்கு மாவட்டத் தலைவா் காா்த்திக் பிரசன்னா, துணைத் தலைவா் சுபாஷ் செல்வராஜ், பொதுச் செயலா் மாணிக்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது.... மேலும் பார்க்க

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈட... மேலும் பார்க்க

புரிந்துணா்வு ஒப்பந்தம்...

தமிழ்நாட்டில் சிறு பண்ணைகளிலும், வயல்களிலும் பணிகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விஎஸ்டி டில்லா்ஸ் டிராக்டா்ஸ் நிறுவனத்துக்கு இடையே வியாழக்கிழமை கையொப்பமான... மேலும் பார்க்க