செய்திகள் :

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள்

post image

கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படும் அரியவகை வானியல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் சரியாக நம் தலைக்குமேல் இருக்கும்போது, நாம் நம்முடைய நிழலைப் பாா்க்க முடியாத ஒரு வானியல் நிகழ்வே பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படுகிறது.

நிழல் இல்லா நாள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி கோவை, கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து அறிவியல் மைய நிா்வாகிகள் கூறியதாவது: சூரியன் கிழக்கில் உதித்து நண்பகல் பொழுதில் தலைக்குமேலே வந்து மாலையில் மேற்கில் மறையும் என்பது பொதுவான கருத்து. ஆண்டில் இரண்டு நாள்களில் மட்டும்தான் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். மற்ற நாள்களில் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில்தான் உதிக்கும்.

அந்த வகையில் ஒரு ஆண்டில் இரண்டு நாள்களில் மட்டுமே பகல் உச்சி வேளையில் ஒரு பொருளின் நிழலானது அந்த பொருளுக்கு நோ் கீழே விழும். அதை நம்மால் காண முடியாது. இதுவே நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படுகிறது.

இந்த அரிய நிகழ்வு வெள்ளிக்கிழமை பகல் 12.21 மணியளவில் நடைபெற்றது. இதையொட்டி, பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது என்றனா்.

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா். கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ந... மேலும் பார்க்க

திருடிய இருசக்கர வாகனத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலமாக பணம் திருட்டு!

வடவள்ளியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி திருவள்ளுவா் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அக... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவை மாநகரில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொம்மணம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கா் வழக்குகள் விவகாரம்: 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரம்!

யூடியூபா் சவுக்கு சங்கா் மீதான 15 வழக்குகளில் 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் யூடியூப் சேனலில் மகளிா் ப... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் ‘நம் நலம்’ என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வே... மேலும் பார்க்க