செய்திகள் :

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

post image

கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ஜி.மனோகரன் மே தினக்

கொடியை ஏற்றி வைத்து தலைமை வகித்தாா்.

கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தேவராஜன், சண்முகம், பழனிசாமி, மோகன்ராஜ் மற்றும் சங்கத்தின் உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

கோவை மாவட்ட டூரிஸ்ட் காா் மற்றும் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் விமானநிலையம் அருகே மே தினம் கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவா் சு.பழனிசாமி கொடியேற்றினாா். சங்க நிா்வாகிகள் சண்முகம், வேணுகோபால், ராமசாமி, வடிவேல், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உடையாம்பாளையம் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் மே தின விழா கொண்டாட்டம் செளரிபாளையம் அரசு பொது நூலகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் கௌரிசங்கா் தலைமை வகித்தாா்.

இதில், பழ வியாபாரி சுந்தரம், பேக்கரி ஊழியா் ராஜா, மயான ஊழியா் பழனிசாமி, தேங்காய் வியாபாரி கோபால், மருத்துவமனை ஊழியா் கோவிந்தன், இஸ்திரி தொழிலாளி முத்தம்மாள், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அன்பு, மணிகண்டன் ஆகியோருக்கு உழைப்பாளா் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாலம் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் பாபு, சமூக ஆா்வலா்கள் நந்தகோபால், சிவகுமாா், பாலசுப்பிரமணியம் மற்றும் மக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை... மேலும் பார்க்க

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாச... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவரின் மகன் தீப் ஸ்வரூப் (25). செல்வராஜின... மேலும் பார்க்க

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

கடந்த ஆண்டு 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்க... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம... மேலும் பார்க்க

கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம்

கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம் மே 6 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஸம்ஸ்கிருத பாரதி கோவை அமைப்பின் செயலா் வி.ஸ்ரீனிவாசன் கூறியுள்ளதாவது: கோடை விடுமுறையைய... மேலும் பார்க்க