செய்திகள் :

கோவை சிங்காநல்லூரில் கிரிக்கெட் திடல்: மதிப்பீட்டுக் குறிப்புகள் முன்மொழிவு!

post image

கோவை சிங்காநல்லூரில் அமையவுள்ள கிரிக்கெட் திடல் தொடர்பாக மதிப்பீட்டுக் குறிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளதாக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளையாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

உள்ளுர், தொழில்முறை மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியான வெற்றிகளுடன் இந்திய கிரிக்கெட்டில் தமிழ்நாடு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சென்னையின் ஆதிக்கத்திற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் இரண்டாம் இடமாக கிரிக்கெட் விளையாட்டின் மையமாக விளங்குகிறது.

தனது கிரிக்கெட் வளத்தை மேலும் மேம்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் திடலை உருவாக்கும் திறத்தை கோயம்புத்தூர் பெற்றுள்ளது. இந்த நகரில் வளர்ந்து வரும் கிரிக்கெட் கலாசாரம், மற்றும் உள்கட்டமைப்பில் அதிகரித்து வரும் முதலீடுகள் கோயம்புத்தூரை தமிழ்நாட்டின் ஒரு வலுவான கிரிக்கெட் மையமாக மாற்றும்.

கோயம்புத்தூரில் உள்ள சிங்காநல்லூர் கிராமத்தில் 28.36 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் திடல் அமைக்கப்படுவதன் நோக்கம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கான ஒரு உலகத்தரமான இடத்தை உருவாக்குவதாகும். இதில் பல முக்கிய விளையாட்டு வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கம், பயிற்சி ஆடுகளம், பயிற்சி திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு அகாதெமிகள் போன்ற பல்வேறு விளையாட்டு வசதிகளைக் கொண்டிருக்கும்.

இது, உள்ளூர் போட்டிகளிலிருந்து சர்வதேச போட்டிகள் வரை நடத்துவதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான மையமாகவும் விளங்குகிறது. மேலும், இங்கு சில்லறை விற்பனை மையங்கள், உணவகங்கள், கிளப், விருந்தினர் மாளிகை, நீச்சல் குளம், ஓடுதளப் பாதை மற்றும் பார்வையாளர் மாட வசதிகள் போன்ற கூடுதல் வசதிகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தினை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்திற்கான மதிப்பீட்டுக் குறிப்புகளை சர்வதேச கிரிக்கெட் மற்றும் திடல்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: முதலீட்டில் செயல் நுண்ணறிவு: இளம் தலைமுறையினர் அபாரம்!

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க