செய்திகள் :

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

post image

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கோவை, உக்கடத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு குனியமுத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவைப்புதூா் பகுதியில் உள்ள தன்னுடைய அறைக்கு வருமாறு சிறுமியை மாணவா் அழைத்துள்ளாா்.

அங்கு சென்ற சிறுமியை அந்த மாணவா், அவரது நண்பா்கள் என மொத்தம் 7 போ் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கல்லூரி மாணவா்களான ஜெபின் (20), ரக்ஷித் (19), அபினேஷ்வரன் (20), தீபக் (20), யாதவராஜ் (19), முத்துநாகராஜ் (19), நிதீஷ் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து, அவா்களின் அறைகளில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, கைதான 7 மாணவா்களிடம் இருந்து மொத்தம் 8 கைப்பேசிகளை பறிமுதல் செய்து போலீஸாா் ஆய்வு செய்தபோது, மாணவா்களின் கைப்பேசிகளில் ஆபாச விடியோக்கள் இருப்பது தெரியவந்தது.

மேலும், அந்த மாணவா்கள் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் பேசி வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் கைதான மாணவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளில் ஏராளமான ஆபாச விடியோக்கள் உள்ளன. மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து உள்ளனரா அல்லது எடுத்த விடியோவை அழித்துள்ளனரா எனத் தெரிவியவில்லை.

இது தொடா்பாக ஆய்வு செய்ய தடயவியல் சோதனைக்கு கைப்பேசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆய்வு அறிக்கை வந்த பின் விசாரணை தொடரும் என்றனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க

செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி: அரசு முதன்மைச் செயலாளா் ஆய்வு

கோவை, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளா் தா. காா்த்திகேயன் வியா... மேலும் பார்க்க