செய்திகள் :

கோவை: திருமணம் கடந்த உறவு - மனைவியின் காதலனை கொன்ற கணவன்

post image

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வசித்து வந்தார்.

முருகவேல்

அங்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி (39) என்பவர் பழக்கமாகியுள்ளார். முனியாண்டி ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே முருகவேல் மனைவிக்கும், முனியாண்டிக்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த முருகவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து முருகவேல் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள வடுகன் காளிபாளையத்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.

முனியாண்டி

இருப்பினும் அவர்களின் திருமணம் கடந்த உறவு தொடர்ந்துள்ளது.  இந்நிலையில் நேற்று மாலை முருகவேல் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது முருகவேல் மனைவி வீட்டில் இல்லை. உடனடியாக அவர் முனியாண்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த முருகவேல் ஆத்திரமடைந்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், முருகவேல் முனியாண்டியின் நெஞ்சு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். முருகவேல் மனைவி உடனடியாக முருகவேலை வீட்டில் தள்ளி கதவை அடைத்துவிட்டு, முனியாண்டியை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

கைது

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிந்து முருகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Industrialist Murder: சொத்துப் பிரச்னை; தொழிலதிபர் தாத்தாவை 73 முறை குத்திக் கொன்ற பேரன்!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன் ராவ். கடந்த வியாழக்கிழமை மாலை, ஜனார்தன் ராவின் உடல் ரத்தக்காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குக் காரணமான அவரது பே... மேலும் பார்க்க

விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! - நடந்தது என்ன?

`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்' என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அது முழுக்க தவறான தகவல்' என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சிய... மேலும் பார்க்க

ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் - நடந்தது என்ன?

தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ... மேலும் பார்க்க

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நில... மேலும் பார்க்க

`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.நடிப்பில் ஆர்வம்கொண்ட... மேலும் பார்க்க

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்... மேலும் பார்க்க