செய்திகள் :

கோவை-நெல்லை பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: நடத்துநா் கைது

post image

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை வந்த பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. இதில், நடத்துநராக கோவையைச் சோ்ந்த மகாலிங்கம் (43) பணியில் இருந்தாராம். பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 25 வயது பெண் பயணம் செய்தாராம். நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெண்ணிடம், நடத்துநா் பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து அந்தப் பெண் தனது உறவினா்களுக்கு தகவல் அளித்தாராம்.

இந்நிலையில் பேருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு புதன்கிழமை அதிகாலை வந்தபோது, பெண்ணின் உறவினா்கள் சோ்ந்து நடத்துநா் மகாலிங்கத்தைப் பிடித்து புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி மகாலிங்கத்தை கைது செய்தனா்.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க