செய்திகள் :

கோவை மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் - நூலிழையில் உயிர் தப்பிய செவிலியர்

post image

கோவை அவிநாசி சாலையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவமனை வளாகத்திள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு ஒரு இளைஞர் நேற்று அத்துமீறி நுழைந்துள்ளார்.

கோவை

அவரை அங்கிருந்த விடுதிக் காப்பாளர் தடுத்துள்ளார். அவரை கடுமையான வார்த்தைகளில் திட்டிவிட்டு உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து அவர் மல்லிகாவின் கழுத்தை நெரித்து கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார்.

அப்போது மல்லிகா தப்பிப்பதற்காக கைகளால் தடுத்துள்ளார். இதனால் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை பாதுகாவலர்கள் அங்கு உடனடியாக விரைந்து இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சுஜித்

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்பது தெரியவந்துள்ளது.

விடுதிக் காப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து, கைது  செய்து சிறையில் அடைத்தனர்.  விசாரணையில் சுஜித்தும், மல்லிகாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மல்லிகா சுஜித்திடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

கைது

இதனால் ஆத்திரமடைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். காயமடைந்த மல்லிகாவுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Industrialist Murder: சொத்துப் பிரச்னை; தொழிலதிபர் தாத்தாவை 73 முறை குத்திக் கொன்ற பேரன்!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன் ராவ். கடந்த வியாழக்கிழமை மாலை, ஜனார்தன் ராவின் உடல் ரத்தக்காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குக் காரணமான அவரது பே... மேலும் பார்க்க

விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! - நடந்தது என்ன?

`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்' என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அது முழுக்க தவறான தகவல்' என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சிய... மேலும் பார்க்க

ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் - நடந்தது என்ன?

தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ... மேலும் பார்க்க

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நில... மேலும் பார்க்க

`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.நடிப்பில் ஆர்வம்கொண்ட... மேலும் பார்க்க

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்... மேலும் பார்க்க