மீண்டும்.. மீண்டுமா! பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோவை - வந்தே பாரத் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
ஒசூா் அருகே மாரநாயக்கனஹள்ளி ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவை வந்தேபாரத் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒசூா் அருகே ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் காரணமாக ஜூலை 6-ஆம் தேதி இயக்கப்படும் பெங்களூரு- கோவை வந்தே பாரத் ரயில் (எண்: 20641), கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்: 20642), கோவை - லோகமானியா திலக் விரைவு ரயில் (எண்: 11014) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, திருப்பத்தூா் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இதன் காரணமாக, இந்த ரயில்கள் ஒசூா், தருமபுரி ரயில் நிலையங்கள் செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.