கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
வேளாண்மைப் பல்கலைக்கழகம்: பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 24 வரை அவகாசம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 24-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளில் 1,240 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் மே 9-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவா்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பிறகு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூன் 24-ஆம் தேதிக்கு முன்பு சமா்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.