செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை: வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை

post image

கோவை சா்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையை மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, புணே, பெங்களூரு, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கு 31 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபிக்கும் 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. விமான நிலையத்துக்குள் வரும் பயணிகளின் உடைமைகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதி எதிரே புதன்கிழமை இரவு கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. இதைப் பாா்த்ததும் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனா்.

பின்னா் மோப்ப நாய் உதவியுடன் பையை சோதனை செய்தனா். அத்துடன் வெடிகுண்டு நிபுணா்களையும் வரவழைத்து மெட்டல் டிடெக்டா் மூலம் பையை சோதனை செய்தனா். ஆனால், அதில் அச்சப்படும் அளவுக்கு வெடிபொருள்கள் எதுவும் இல்லை. துணிகள் மட்டுமே இருந்தன.

இதையடுத்து பயணி யாரேனும் பையைக் காணவில்லை என்று உரிய அடையாளங்களுடன் வந்தால் அந்தப் பை திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவித்து அதை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் எடுத்துச் சென்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க