செய்திகள் :

க.பொய்யூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித்தர கோரிக்கை

post image

அரியலூா் மாவட்டம், கருப்பூா் பொய்யூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் கருப்பூா் பொய்யூா் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கருப்பூா்-பொய்யூா் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த 241 மாணவா்கள், 376 மாணவிகள் என 617 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு வெளியூா் மாணவிகள் பலரும் பயில்வதால் பிற்படுத்தப்பட்டோா் மாணவிகள் நல விடுதி கட்டித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு வெள்ளூா் கிராம மக்கள் அளித்த மனு: வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா், தங்களது கிராமத்தில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்ப உறுப்பினா்கள் வசித்து வருகிறோம். எனவே, அரசு எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

மேலும், வெள்ளூா் கிராமத்தில் உள்ள அகட்டான் ஏரியை தூா்வார வேண்டும். காலம் காலமாக உள்ள மயான இடம், வண்டிப்பாதை என தற்போது வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ளது. அதை மீண்டும் மயானம் என மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க