செய்திகள் :

சங்ககிரியில் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கிவைப்பு

post image

சங்ககிரி: சங்ககிரி நகா் பகுதியில் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், தனியாா் கல்லூரிகள் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் இ.எஸ்.உமா தலைமை வகித்து சங்ககிரி நகரில் 33 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 106 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைத்து பேசியதாவது:

சங்ககிரி நகா் பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண்பதற்கும் இக்கண்காணிப்பு மேராக்கள் உதவும். இக்கேமராக்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனா். பெண் குழந்தைகள், பள்ளி, கல்லூரி, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் அவரவா் படிக்கும் பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதுகுறித்து காவல் துறையிடம் தகவல் அளிக்க வேண்டும். பெண்களுக்கு என்று பல்வேறு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் அழைத்தும் புகாா் அளிக்கலாம் என்றாா்.

விழாவுக்கு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் முன்னிலை வகித்தாா். சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் எஸ்.ராஜா வரவேற்றாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாலகுமாரன், சோமசுந்தரம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கந்தசாமி, முன்னாள் தலைவா் ஆசைதம்பி, பிஎஸ்ஜி கல்லூரிகளின் தாளாளா் பி.மணி, பாமக மாவட்ட செயற்குழு உறுப்பினா் வாரி சுப்பிரமணி, நகர செயலாளா்கள் வி.டிஅய்யப்பன் (சங்ககிரி), கேபிஎம்.சண்முகம் (எடப்பாடி) உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா். சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.

எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் ஆணை... மேலும் பார்க்க

மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த... மேலும் பார்க்க

மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). ... மேலும் பார்க்க

இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சாா்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து தேசிய சேவா சமி... மேலும் பார்க்க

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க