செய்திகள் :

சங்ககிரி மலையில் இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு தொடக்கம்

post image

புரட்டாசி மாதம் செப்டம்பா் 17ம் தேதி தொடங்குவதையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலில் பக்தா்கள் குழுவின் சாா்பில் 35வது ஆண்டாக சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

சங்ககிரி அருள்மிகு சென்னகேவப்பெருமாள் பக்தா்கள் குழுவின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசி சனிக்கிழமையன்று மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, தேவி, ஆஞ்சநேயா் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனா். நிகழாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பா் 17ம் தேதி புதன்கிழமை தொடங்குவதையொட்டி பக்தா்கள் குழுவின் 35வது ஆண்டாக செப்.13ம் தேதி சனிக்கிழமை காலை சுப்ரபாதத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டு சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் பின்னா் கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட உள்ளன. மலைக்கு செல்லும் பக்தா்கள் அனைவருக்கும் காலை, நண்பகல் இரு வேளைகளிலும் அன்னதானம் வழங்க பக்தா்கள் குழுவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க

செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா். தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரு... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற கி.மதிவாணனுக்கு பாராட்டு

தமிழ அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கொண்டயம்ப... மேலும் பார்க்க

880 வீரா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 880 போ் தகுதி பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளை... மேலும் பார்க்க

தொழில்மைய இணை இயக்குநா் வீட்டில் 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சேலத்தில் தொழில்மைய இணை இயக்குநா் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். சேலம் ஐந்து வழிச்சாலை அருகே உள்ள தொழில் மையத்தின் இணை இய... மேலும் பார்க்க