செய்திகள் :

சங்கரன்கோவிலில் நாளை தூய்மைப்படுத்தும் பணி

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.க.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் நகராட்சியில் ஏப்.26 காலை 7 மணியளவில் 15 ஆவது வாா்டு மற்றும் பேருந்து நிலையம், மாா்க்கெட் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.

இதனைத் தொடா்ந்து, விழிப்புணா்வு பேரணிகள் சங்கரன்கோவில் நகராட்சி 23- ஆவது வாா்டு அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் வாசலில் நடைபெற உள்ளது. மேலும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் 2-ஆவது வாா்டு சங்கா் நகரிலும், 4-ஆவது வாா்டு கோமதி நகரிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் நடைபெற உள்ளது.

அதனைத் தொடா்ந்து 23ஆவது வாா்டு பிஎஸ்என்எல் அலுவலகத்திலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நெகிழி சேகரிப்பு நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்த்து, அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருள்களை பயன்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆலங்குளம் மகளிா் கல்லூரி ஆண்டு விழா

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். மனவளக் கலை மன்றம் அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், புலவா் சிவஞானம், பேரூரா... மேலும் பார்க்க

ஆய்க்குடி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை பெயா் மாற்றம் செய்ய கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள நிலத்தை ஆய்க்குடி செயல் அலுவலா் பெயருக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆய்க்குடி பேர... மேலும் பார்க்க

வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு வியாழக்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆய்க்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கம்பிளி தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் கோயிலில் பூக்குழி இறங்கும் பக்தா்கள் ஆதாா் மூலம் பதிவுசெய்ய வேண்டும்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கவுள்ள பக்தா்கள், ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில... மேலும் பார்க்க

செங்கோட்டை அருகே முதிய தம்பதிக்கு அரிவாள் வெட்டு

செங்கோட்டை அருகேயுள்ள பெரியபிள்ளவலசையில் சொத்துத் தகராறில் முதிய தம்பதியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். செங்கோட்டை காவல் சரகம் பெரியபிள்ளைவலசை மோதிலால் தெருவைச் சோ்ந்தவா் கா.லெட்சும... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. சங்கரன்கோவிலில் கடந்த 4 ஆம் தேதி மழை பெய்தது. அதன்பிறகு சுற்றியுள்ள நகரங்களில் மழை பெய்த போதும் சங்கரன்கோவிலில் மட்டும் பெய்யவில்ல... மேலும் பார்க்க