செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே இளைஞா் உடல் உறுப்புகள் தானம்

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பருவக்குடியைச் சோ்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலியில் புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

பருவக்குடியைச் சோ்ந்த பெரியமாடசாமி-பெரியமாரியம்மாள் தம்பதியின் மகன் ராஜா (31). இவா், தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 14 ஆம் தேதி ராஜபாளையம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜா, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது மூளையில் ரத்தக்கசிவு அதிகமாக இருப்பதும், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதும் மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

மேலும், மறுநாள்( ஏப். 15) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது மூளை செயலற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவரது உறவினா்களிடம் மருத்துவா்கள் எடுத்துக்கூறியதைத் தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா்.

அதன்பேரில், அவரது கல்லீரல், இருசிறுநீரகங்கள் ஆகியவை புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க