செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே விபத்தில் பாதயாத்திரை பக்தா் பலி

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சொக்கநாதன்புத்தூரை சோ்ந்த மாரிமுத்து மகன் மாரிச்செல்வம் (40). ஓட்டுநா். இவா் அப்பகுதியைச் சோ்ந்த பாதயாத்திரை குழுவுடன் திருச்செந்தூா் கோயிலுக்கு சங்கரன்கோவிலை அடுத்த சண்முகநல்லூா் வழியாக வெள்ளிக்கிழமை பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மாரிச்செல்வம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மாரிச்செல்வத்துக்கு மனைவி வள்ளி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

ஓட்டுநா் மீது மாணவா்கள் தாக்குதல்: சுரண்டையில் அரசுப் பேருந்து பணியாளா்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து கழகத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவா் இறந்தாா். கடையநல்லூா், பாம்புகோயில்சந்தை இடையே உள்ள ரயில் பாதையில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயற்சி: தென்காசி வட்டாரத்தில் 36 போ் கைது

தென்காசி வட்டாரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவினா் 36 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் செல்வதற்காக தென்காசி ரயில் நிலையத்து... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோயில் பிரச்னை தொடா்பாக அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன சோதனை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரியில் பவானி என்பவருக்குச் சொந்தமான தென்னை நாா் ஆலை உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை: தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் முக்... மேலும் பார்க்க