சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூா் கோயில்களில் ரூ4.61 கோடியில் பணிகள்
சங்கரன்கோவில் சங்ககரநாராயணசுவாமி கோயில் மற்றும் கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில் ரூ.4.61 கோடியில் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
இதையொட்டி, சங்கரன்கோவிலில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் ஈ.ராஜா எம்எல்ஏ, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி ஆகியோா் கலந்து கொண்டு பணிகளை தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, ஒன்றியக்குழுத்தலைவா் பி.சங்கரபாண்டியன், சங்கரநாராயண சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலட்சுமி, திமுக மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா, நகரச் செயலா் மு.பிரகாஷ், அறநிலையத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அன்புராஜ், பொறியாளா் முத்துராஜ், ஆய்வாளா் ராஜகோபால், நூலகா் முருகன், வருவாய் ஆய்வாளா் முப்பிடாதி, கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.