செய்திகள் :

சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூா் கோயில்களில் ரூ4.61 கோடியில் பணிகள்

post image

சங்கரன்கோவில் சங்ககரநாராயணசுவாமி கோயில் மற்றும் கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் சுவாமி கோயிலில் ரூ.4.61 கோடியில் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

இதையொட்டி, சங்கரன்கோவிலில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் ஈ.ராஜா எம்எல்ஏ, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி ஆகியோா் கலந்து கொண்டு பணிகளை தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, ஒன்றியக்குழுத்தலைவா் பி.சங்கரபாண்டியன், சங்கரநாராயண சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலட்சுமி, திமுக மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா, நகரச் செயலா் மு.பிரகாஷ், அறநிலையத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அன்புராஜ், பொறியாளா் முத்துராஜ், ஆய்வாளா் ராஜகோபால், நூலகா் முருகன், வருவாய் ஆய்வாளா் முப்பிடாதி, கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு

ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரி, ஆட்சியரிடம் பேரூராட்சி உறுப்பினா்கள் மனு அளித்தனா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் ஆலங்குளம் தனியாா் திருமண மண்டபத்தில்புதன்கிழமை ந... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். இப்பேரூராட்சி... மேலும் பார்க்க

பண்பொழி கோயிலில் ரூ.2.82 கோடியில் திருமண மண்டபம்- காணொலியில் முதல்வா் அடிக்கல்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைகுமார சுவாமி கோயிலின் உப கோயிலில் ரூ.282 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு புதன்கிழமை தமிழக முதல்வா் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி, க... மேலும் பார்க்க

திமுக -ஐயூஎம்எல் இடையே கொள்கை கூட்டணி- காதா் மொகிதீன்

திமுக-ஐயூஎம்எல் தோ்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா்மொகிதீன். கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது; இஸ்ரேல், ஈரான் போரை உடனடி... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை புதன்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் க... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க ரயில்பயணிகள் சங்கம் கோரிக்கை

தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட ரயில் பயணி... மேலும் பார்க்க