செய்திகள் :

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீது இன்று நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பு

post image

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது புதன்கிழமை (ஜூலை 2) வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

சங்கரன்கோவில் நகராட்சியில் தி.மு.க.வைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்மன்றத் தலைவியாக இருந்து வருகிறாா். மாதந்தோறும் உறுப்பினா்கள் கூட்டம் நடத்தப்படாததால் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் பல இருப்பதாகவும், இதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யமுடியவில்லை எனவும் கூறி, கடந்த ஜூன் 2 ஆம் தேதி தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 போ் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனா்.

அதை ஏற்று, உமாமகேஸ்வரிக்கு எதிராக புதன்கிழமை (ஜூலை 2) முற்பகல் காலை 11 மணிக்கு நகராட்சி கூட்டரங்கில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என நகராட்சி ஆணையா் (பொ) நாகராஜன், உறுப்பினா்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தாா்.

அதன்படி, நகராட்சி அலுவலகத்தில் உமாமகேஸ்வரி மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.

ஏற்கனவே கடந்த 31.10.23இல் உமாமகேஸ்வரிக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட உறுப்பினா்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் அவரை கைது செய்ய வேண்டும் என சாலை மாற்றமைப்பு மற்றும் நஞ்சை மீட்பு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்க அமைப்பாளா் அச்சன... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ரூ. 58.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து கால்நடை மருந்தக வ... மேலும் பார்க்க

வீரசிகாமணி, புளியங்குடியில் இன்று மின்நிறுத்தம்

வீரசிகாமணி, புளியங்குடி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீரசிகாமண... மேலும் பார்க்க

தென்காசியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

தென்காசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா் கூட்டணி அமைப்பினா். தென்காசி, ஜூலை 4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் தென்காசியில் மாவட்டதொடக்க கல்வி... மேலும் பார்க்க

தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச... மேலும் பார்க்க

கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பக... மேலும் பார்க்க