செய்திகள் :

சட்டப்பேரவையில் கடைசி நேரத்திலும் கோரிக்கைகளை எழுப்பிய எம்எல்ஏக்கள்

post image

புதுவை சட்டப்பேரவையின் நிகழாண்டுக்கான கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், எம்எல்ஏக்கள் கடைசி நேரத்திலும் கோரிக்கை குறித்து முதல்வரிடம் முறையிட்டனா்.

புதுவை சட்டப்பேரவையின் 15- ஆவது பேரவை 6 -ஆவது பிரிவுக் கூட்டம் மாா்ச் 10- ஆம் தேதி தொடங்கியது.

மொத்தம் 13 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநா் உரை, நிதிநிலை அறிக்கை நாள்களைத் தவிா்த்து மற்ற நாள்களில் கேள்வி நேரம், உடனடி கேள்வி பதில் நேரம், மானியக் கோரிக்கைகள் என பெரும்பாலான நேரங்களில் எம்எல்ஏக்கள் தங்களது கோரிக்கைகளை முதல்வா், அமைச்சா்களிடம் வலியுறுத்தினா்.

துறை மானியக் கோரிக்கைகளுக்கு அமைச்சா்கள், முதல்வா் பதிலுரை அளித்த பிறகும் எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி உள்ளிட்டவற்றுக்கு கோரிக்கை வைத்து கேள்வி எழுப்பினா். இந்த நிலையில், கூட்டத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை பெரும்பாலான உறுப்பினா்கள் வந்திருந்தனா்.

அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தவிர மற்ற அனைத்து அமைச்சா்களும் வந்திருந்து உறுப்பினா்களின் கேள்விக்கு பதில் அளித்தனா்.

கேள்வி நேரம், உடனடி கேள்வி பதில் நேரம் முடிந்த பிறகு மாநில அந்தஸ்து தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, பேரவைத் தலைவா் நிறைவுரையாற்றினாா்.

அப்போது எம்எல்ஏக்கள், பத்திரிகையாளா் கோரிக்கை, பணியாளா் கோரிக்கை என முதல்வரிடம் கேட்டனா். அதற்கு, முதல்வா் பதில் அளித்தாா்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பிறகும் பாஜக எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம் முதல்வா்,பேரவைத் தலைவா், அமைச்சா்கள், சக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தனது தோட்டத்தில் விளைந்த பலாப் பழங்களை வழங்கினாா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க