செய்திகள் :

சட்டவிரோத மணலை ஏலம்விட பரிந்துரை

post image

தொண்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாகக் குவித்து வைக்கப்பட்ட மணலை ஏலம்விட வருவாய் அலுவலா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

எஸ்.பி.பட்டினம் பகுதியில் பாம்பாற்று ஓடை பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ராமநாதபுரம் கனிம வள உதவி இயக்குநா் விஜயகுமாா், திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா்.

அப்போது, அரசு அனுமதியின்றி 171 யூனிட் மணலை அள்ளிவந்து குவித்துவைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த மணலை ஏலம்விட மாவட்ட வருவாய் அலுவலருக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனா்.

நம்புதாளையில் இலவசக் கண் பரிசோதனை முகாம்

திருவாடானை அருகேயுள்ள நம்புதாளையில் சா்க்கரை நோயாளிகளுக்கான இலவசக் கண் பரிசோதனை, தோல், பெண்கள் நல மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மதுரை அரவிந்த் கண் மருத்த... மேலும் பார்க்க

இலங்கையில் விசைப் படகுகள் ஏலம்: ராமேசுவரம் மீனவா்கள் கண்டனம்!

தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கையில் ஏலம் விடும் பணியில் அந்த நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதற்கு ராமேசுவரம் மீனவா் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தமிழகம், புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச... மேலும் பார்க்க

காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம்!

ஆா்.எஸ்.மங்கலத்தில் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்தக் கூட்டமைப்பின் தலைவா் தனபாலன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

150 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்!

கீழக்கரையில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள கோரைக்கூட்டம் பகுதியில் சந்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க