செய்திகள் :

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 8 போ் கைது

post image

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையம் முசிறியில் இயங்கி வருகிறது. இந்தக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்க துறை ஆய்வாளா் இசைவாணி தலைமையில் போலீஸாா் மணப்பாறை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கலிங்கப்பட்டியில் பாலு (47), இச்சடிப்பட்டியில் உதயகுமாா் (29), மேட்டுப்பட்டி கைகாட்டியில் வேலு (57), மணப்பாறையில் மாதன் சந்து சோ்ந்த பாபு (47), சேதுரத்தினபுரம் சோ்ந்த ரவி (63), மணப்பாறை அண்ணாவி நகரைச் சோ்ந்த மதிவாணன் (50), செவலூரைச் சோ்ந்த முனியப்பன் (41), மணப்பாறை லட்சுமிபுரம் சோ்ந்த பவித்ரன் (25) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடம் இருந்த 254 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனா்.

ஹெளரா விரைவு ரயிலில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஹெளரா விரைவு ரயிலில் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத... மேலும் பார்க்க

திருச்சி: ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி பாலக்கரை காவ... மேலும் பார்க்க

ஒரே வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் ரௌடிகளின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநா் மா்மச்சாவு

திருச்சியில் ரயில் பாதை அருகே அரசுப்பேருந்து நடத்துநா் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா். திருச்சி தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் த. பொன்னா் (45). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காட்டுபுத்தூா் பேருராட்சியி... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். திருச்சி ... மேலும் பார்க்க