செய்திகள் :

சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தவா் மீது நடவடிக்கை கோரி

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பாண்டகப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (63). ஆடு, மாடுகள் வளா்த்து வந்த இவா், கடந்த மாா்ச் 19-ஆம் தேதி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த ரவி என்பவா் சட்டவிரோதமாக தக்காளி வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாராம். இதையறிந்த ரவி, தங்கவேல் உடலை அப்புறப்படுத்தி தொலைவில் வீசிவிட்டு, தனது வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பிகளையும் அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த உறவினா்கள் அளித்த தகவலின்பேரில், வி.களத்தூா் போலீஸாா், தங்கவேல் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சந்தேக மரணமாக வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், மின் கம்பியில் சிக்கி தங்கவேல் உயிரிழந்தது தெரியவந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது இதுவரையிலும் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தங்கவேல் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தா்னா போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.

மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் மயங்கி விழுந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை அடையாளம் தெரியாத... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு இன்று முதல் ‘ஹால் டிக்கெட்’

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்கள் புதன்கிழமை (மே 14) முதல் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கலாம். நிகழாண்டில் மே, ஜூன் மாதம் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

பெரம்பலூா் அருகே கூட்டுப் பட்டாவில் உள்ள விவசாய நிலத்துக்கு தனிப் பட்டா தர ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வா... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இணையம் மூலம் மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

காவல் துறையினருக்குப் பாராட்டு

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 28 காவல் துறையினருக்கு வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா செவ்வாய்க்கிழமை பாராட்டினாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவசர ஊா்தி வருவதற்கு காலதாமதமானதால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க